சென்னை: விவசாய நிலங்களுக்கு இடையே எரிவாயு குழாய்கள் அமைக்கும் பணியை தடுத்த நிறுத்த வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தர்மபுரி மாவட்டம், பாலவாடி உள்ளிட்ட பகுதிகளில் கெயில் நிறுவனத்தினர் 3 நாளாக எரிவாயு குழாய் அமைக்க நில அளவீடு செய்து வருவதாகவும், இதனை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கரியப்பன அள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி கணேசன், தன்னுடைய நிலம் பறிபோக போக போகிறது என்று தற்கொலை செய்து கொண்டதாகவும் செய்திகள் வந்துள்ளன.