டெல்லி: விவசாய மக்களின் பெண் குழந்தைகளின் கல்விக்கு தனது மாநிலங்களவை ஊதியத்தை செலவழிக்க உள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரரும், ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினருமான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். பஞ்சாபில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 117 இடங்களில் 92 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றிபெற்றது. பஞ்சாப் முதல்வராக அக்கட்சியின் மூத்த தலைவர் பகவந்த் மான் கடந்த மாதம் 16ம் தேதி பொறுப்பேற்று கொண்டார். இதையடுத்து பஞ்சாபில் 5 மாநிலங்களவை இடங்களுக்கு கடந்த 31ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி வேட்பாளராக ஹர்பஜன் சிங்கும், வேட்புமனு தாக்கல் செய்தார். ஹர்பஜன் சிங் உள்ளிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர்கள் 5 பேரும் போட்டியின்றி மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.