சென்னை: திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் 16.04.2022 முதல் 25.04.2022 வரை பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது.108 திவ்ய தேசத்தின் முக்கிய தலமான சென்னை திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் பிரமோற்சவ விழா சிறப்பாக நடைபெற திருக்கோயில் சார்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சித்திரை திருவிழா முதல் நாள் புன்னைமர வாகனத்தில் பார்த்தசாரதி சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.