சென்னை: சித்திரை திருநாள் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை திருநாளை வரவேற்கும் விதமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்துகோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் உள்ள முக்கியக் கோவில்களில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, சாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், வடபழனி முருகன் கோவில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே தனியார் கல்லூரியில் சித்திரை திருவிழாவை ஒட்டி பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.