திருச்சி: திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு தினசரி விமான சேவையை மே 15-ம் தேதி முதல் இண்டிகோ தொடங்குகிறது. திருச்சியில் இருந்து குவைத்துக்கு வாரம் ஒரு முறை ஏர் இந்தியா நிறுவனம் ஜூலை மாதம் முதல் விமானத்தை இயக்குகிறது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் குறைந்த நிலையில், சர்வதேச விமான சேவைகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகிறது. அதன்படி, உள்நாட்டு, வெளிநாட்டு விமான நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையை தற்போது அதிகரித்துள்ளன.