சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ேஜாசப் சாமுவேல் (திமுக) பேசுகையில், ‘அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்பத்தூர், ஒரகடம் மற்றும் புதுமேனாம்பேடு பகுதிகளில் சுமார் 87 ஆயிரம் மின் நுகர்வோர்கள் உள்ளனர். இவர்களுக்கு சீரான மின்சாரம் வழங்க 110 கேவி கொண்ட புதிய துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்,’ என்றார்.