சென்னை: ஈரோடு, கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் மொத்தம் 9 ஆற்றுப் பாலங்கள் ரூ.136.32 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் என அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார். உதகமண்டலம் நகருக்கு மாற்றுப் பாதை ரூ.70 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், பசுமலையில் ரூ. 26.33 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கப்படும். தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு கடல்சார் பயிற்சி நிறுவனத்தின் தரத்தை நவீன வசதிகளுடன் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.