சென்னை: சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப்பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷையனின் பதவிக்காலத்தை வரும் டிசம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். புதிய தேர்வுக் குழுவை அடுத்த ஓரிரு மாதங்களில் அமைக்கும் படியும் தமிழக அரசுக்கு ஆளுநர் ரவி உத்தரவிட்டுள்ளார். டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப்பல்கலைக்கழகத்தின் 10-வது துணைவேந்தராக 2018-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி பொறுப்பேற்ற சுதா சேஷையனின்பதவிக்காலம் கடந்த ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி உடன் நிறைவடைந்தது.