சென்னை: சென்னையை அடுத்த தாம்பரம் அருகே குடும்ப தகராறில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சென்னையை அடுத்த தாம்பரம் திருநீர்மலையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுரேஷ் என்பவரே தற்கொலைக்கு முயன்றவர். வழக்கம் போல் குடிபோதையில் வீட்டிற்கு வந்த அவர், குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் உள்ளவர்களை மிரட்டுவதற்காக ஆட்டோ ஓட்டுநர் சுரேஷ் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.