அந்தமான் அருகே கைதான 11 பேருக்கு போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பா?.: அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை

சென்னை: அந்தமான் அருகே கைதான 11 ஈரானியருக்கு போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பா என விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சில தினங்களுக்கு முன்னதாக அந்தமான் தீவு அருகே இந்திரா என்ற பகுதியில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக சர்வதேச போதை பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டதில் ஈரான் கப்பல் ஒன்றை அதிகாரிகள் சிறைபிடித்தனர்.

அந்த கப்பலில் சோதனை மேற்கொண்டதில் போதைப்பொருட்கள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதனால் அந்த கப்பலில் இருந்த 11 பேரை கைது செய்து விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.

அந்த விசாரணையில் அந்த 11 பேருக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா? அல்லது வேறு சதித்திட்டம் உள்ளதா என போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

 

11 பேருக்கும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் படி விசாரணை நடைபெறுகிறது. ஈரானியர்கள் வந்த கப்பலில் குறிப்பிட்ட அளவிலான போதைப்பொருள் இருப்பது தெரியவந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.   

Related Stories: