சென்னை :கனமழை காரணமாக நாகையை தொடர்ந்து காரைக்காலிலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக வட இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நாகையில் சனிக்கிழமை இரவு இடியுடன் கூடிய மழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை நாகை, நாகூர், வேளாங்கண்ணி, கீழ் வேளூர், திட்டச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதேபோல காரைக்கால் பகுதியிலும் நேற்று இரவு முதல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.