திருவெறும்பூர்: திருவெறும்பூர் அருகே வாழவந்தான் கோட்டையில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமை மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். திருவெறும்பூர் அருகே வாழவந்தான்கோட்டை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. இந்த முகாமை மத்திய அரசின் அயலகத் தமிழர் நலன் துணைச் செயலாளர் பல்ஜித்சிங் மற்றும் அதன் பிரிவு அலுவலர் சுப்ரமணியன் மற்றும் தமிழக மறுவாழ்வுத் துறை இணை இயக்குனர் ரமேஷ், மறுவாழ்வுத்துறை தேர்வு நிலை கண்காணிப்பாளர் புகழேந்தி, திருச்சி தனித்துணை கலெக்டர் ஜமுனாராணி மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் ரவி, கணேசன் ஆகியோர் அடங்கிய குழுவினர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தனர்.