ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினரின் என்கவுன்ட்டரில் லஷ்கர்- இ-தொய்பா தளபதி உட்பட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினரும் காஷ்மீர் போலீசாரும் அங்கு விரைந்தனர். Sirhama பகுதியில் தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள், வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதற்கு பதிலடியாக வீரர்கள் நடத்திய தாக்குதலில் 1 தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.