ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு தளபதி உட்பட 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினரின் என்கவுன்ட்டரில் லஷ்கர்- இ-தொய்பா தளபதி உட்பட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினரும் காஷ்மீர் போலீசாரும் அங்கு விரைந்தனர். Sirhama பகுதியில் தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள், வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதற்கு பதிலடியாக வீரர்கள் நடத்திய தாக்குதலில் 1 தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.

Sirhama பகுதியில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட லஷ்கர் இ-தொய்பா தளபதி நிசார் தர் என்று அடையாளம் காணப்பட்டது. இதே போன்று குல்காம் மாவட்டத்தில் டிஎச் போரா பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் லஷ்கர் இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான். தொடர்ந்து அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனந்த்நாக்கின் சில பகுதிகளில் இணையம் முடக்கப்பட்டுள்ளது. மேலும், அனந்த்நாத் சிர்ஹாமா பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: