சென்னை: கோடைக்கால விடுமுறையின்போது ஏற்படும் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்: தாம்பரம் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் (06005) வரும் 22, 29, மே 6, 13, 20, 27, ஜூன் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் இரவு 7.30 க்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். அதை போன்று மறுமார்க்கத்தில் நாகர்கோவில் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் எண் (06006) வரும் 24, மே 1, 8, 15, 22, 29, ஜுன் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.