புழல் 24வது வார்டில் இ.சேவை மையம் பயன்பாட்டுக்கு கொண்டுவர மக்கள் கோரிக்கை

புழல்: சென்னை மாநகராட்சி புழல் 24வது வார்டில் மூடப்பட்ட இ.சேவை மையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் பழைய வார்டு 23 மற்றும் புதிய வார்டு 24ல் உள்ள புழல் மாநகராட்சி வார்டு அலுவலக வளாகத்தில், அரசின் இ.சேவை மையம் இயங்கிவந்தது. இது கடந்த 2 மாதமாக செயல்படாததால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஆதார் அட்டை உள்பட அனைத்து பணிகளும் மேற்கொள்ள முடியாமல் தவித்தனர்.

இ.சேவை மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆதார் அட்டை, பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வரும் மக்கள் கடும் ஏமாற்றம் அடைகின்றனர். மேலும் தங்களது பகுதியில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரம் சென்று இ.சேவை  மையத்துக்கு செல்கின்றனர். எனவே, புழல் 24வது வார்டு பகுதியில் செயல்பட்டு வந்த இ-சேவை மையத்தை மீண்டும் திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர்.

Related Stories: