விருகம்பாக்கம் தொகுதியில் உள்ள நூலகங்களை நவீனப்படுத்த வேண்டும்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பதில்

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது விருகம்பாக்கம் தொகுதி எம்எல்ஏ ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா பேசுகையில், விருகம்பாக்கம் தொகுதியில் உள்ள நூலகங்களை நவீனப்படுத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: விருகம்பாக்கம் தொகுதியில் உள்ள சாலிகிராமம், கே.கே.நகரில் உள்ள கிளை நூலகங்களில் அனைத்து வசதிகளும் இருக்கிறது

தேவைப்படும் பட்சத்தில் உரிய கருத்துரு பெற்று கிளை நூலகங்களை நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

நடப்பு ஆண்டிலேயே 4,650 நூலகங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிந்த உடன் பணிகள் தொடங்கும். இவ்வாறு பதில் அளித்தார்.

Related Stories: