இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவுங்கள்: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். வேதனையில் தவிக்கும் இலங்கைத் தமிழர்கள் பற்றி முதல்வர் தனது கவலையை தெரிவித்துக் கொண்டார். இலங்கை தமிழர்களின் நலனுக்காக தமிழ்நாடு அரசு அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப தயார் என்றும் முதல்வர் தெரிவித்திருக்கிறார்.

Related Stories: