3வது மாடியில் இருந்து குதித்த இளைஞர்: அந்தரத்தில் தொங்கியபடி உயிருக்கு போராடினர்: போலீசார் விசாரனை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் வளாகத்தில் 3வது  மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற நோயாளியால் பரபரப்பு ஏற்பட்டது உயிருக்கு போராடிய அந்த நபர் அந்தரத்தில் தொங்கினர் மாடியில் இருந்து குதித்த இளைஞர் ஸ்லாப் மேல விழுந்தார் ஸ்லாப்பை பிடித்து அந்தத்திரத்தில் தொங்கியபடி உயிருக்கு போராடிய இளைஞரை அங்குள்ளவர்கள் காபற்றினார்கள். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நாளொன்றுக்கு பலாயிரம் மக்கள் உள்நோயாளியாகவும், வெளிநோயாளியாகவும் வருகின்றனர்.

இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு கட்டிட பிரிவில் 3வது மாடியில் மேலே இருந்து கீழே குதிக்க முயன்ற நோயாளியால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் என்றும், மனநிலை சற்று பாதிக்கபட்டவர் என்றும் தெரிகிறது. வலிப்பு நோய்க்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு மருத்துவனையில் சேர்ந்தார், மருத்துவமனையில் யாரும் இல்லாத சமயத்தில் மேல் தளத்திற்கு சென்று அங்கிருந்து கீழே குதிக்க முயன்றுள்ளார், தொடர்ந்து அவரை ஆம்புலன்ஸ் ஊழியர்களும் மருத்துவனை  ஊழியர்களும் அவரை மீட்டனர். செங்கல்பட்டு போலீசார் அவரிடமும் நோயாளின் உறவினர்களிடமும் விசாரனை நடந்தி வருகிறார்கள்.

Related Stories: