புழல்: சென்னை-கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில், புழல், கதிர்வேடு சந்திப்பு பகுதியில் நேற்றிரவு ஏராளமான வாகனங்கள் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக சென்ற ஒரு வாகனத்தில் இருந்து ஆயில் சாலையில் கொட்டியுள்ளது. இதை கவனிக்காமல் வாகன ஓட்டிகள் சென்றுக்கொண்டிருந்தனர். இதனால் மாதவரத்தில் இருந்து புழல் நோக்கி சென்ற 10க்கும் மேற்பட்ட பைக்குகள் சாலையில் வழுக்கி விழுந்ததில் வாகன ஓட்டிகள் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்ததும் அப்பகுதியினர் சென்று ஆயில் மீது மணல் பரப்பியதுடன் அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் புழல் போக்குவரத்து போலீசார் வந்தனர். அவர்களும் அங்கிருந்து மணல் மூட்டைகளை கொண்டு வந்து சாலையில் கொட்டி ஆயிலை அப்புறப்படுத்தினர்.