திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் வருகின்ற 25ம் தேதி வரை குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
குடிசைகள் இல்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கத்தில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 2010ம் ஆண்டு குடிசை வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 526 கிராம ஊராட்சிகளில் கூரை வீடுகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இது வருகின்ற 25ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.