திருவண்ணாமலை: செய்யாறு அருகே மினி வேனில் நூதன முறையில் பதுக்கி கொண்டுசெல்லப்பட்ட 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஆற்காடு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தனிப்படை போலீசார், பெங்களூருவில் இருந்து செய்யாறு நோக்கி சென்ற மினி வேனை மடக்கி சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் பிரத்யேகமாக தனி அறைகள் அமைக்கப்பட்டு அதற்குள் சுமார் 4 லட்சம் மதிப்புள்ள குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.