கார் மீது லாரி மோதி தாய், மகன் உட்பட 4 பேர் பலி

பெரம்பலூர்: கள்ளக்குறிச்சி மாவட்டம், முடியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (46). கள்ளக்குறிச்சி தீர்த்தாலுநகரை சேர்ந்தவர் கதிரவன் (45). நண்பர்களான இருவரும், கதிரவனின் தாய் தமிழரசி (65), தம்பி கார்முகில் (40), மகன் சந்திரவதனன்(12), கார்முகில் மகன் லிங்கநேத்திரன் (8), கண்ணன் மனைவி வேதவள்ளி, இரண்டு குழந்தைகள் ஆகிய 9 பேர் நேற்று காலை 6 மணிக்கு  கள்ளக்குறிச்சியிலிருந்து காரில் திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு மதியம் 2 மணியளவில் திரும்பி கொண்டிருந்தனர். காரை கதிரவன் ஓட்டினார். பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூருக்கு முன் வந்தபோது ஒரு கார் ஓவர்டேக் செய்யவே கதிரவன் வலதுபுறம் திருப்ப முற்பட்டார். இதில் கார் வலதுபுற சாலைக்கு சென்று எதிரே நெல் மூட்டை ஏற்றி வந்த லாரி மீது மோதி, மின்கம்பத்தில் இடித்தது. மின்கம்பம் முறிந்து விழுந்தது. இதில் கண்ணன், தாய் தமிழரசி, கார்முகில், அவரது மகன் லிங்கநேத்திரன் ஆகியோர் பலியாகினர். மற்றவர்கள் காயத்துடன் சிகிச்சை பெறுகின்றனர்.

Related Stories: