பெரம்பலூர்: பெரம்பலூர் அடுத்த சிறுவாச்சூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 8 வயது சிறுவன் உள்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் மதியம் 2 மணி அளவில் பெரம்பலூர் அடுத்த சிறுவாச்சூர் அருகே ஒரு பிரிவுச் சாலை உள்ளது. அந்த வளைவில் கார் திரும்பும் பொது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த லாரி கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் கார் உருக்குலைந்து காணப்படுகிறது. இந்த காரில் பயணம் செய்த 9 பேரில் 8 வயது சிறுவன் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.