துரைப்பாக்கம்: கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை பஸ் ஸ்டாப் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை நோக்கி பேருந்து, கன்டெய்னர் லாரி மற்றும் கார் என ஏராளமான வாகனங்கள் வந்துகொண்டிருந்தன. அப்போது, கடலூரில் இருந்து மீன் ஏற்றுவதற்காக காசிமேடு பகுதியை நோக்கி கன்டெய்னர் லாரி வந்தது. இதை கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மணிவேல்(31) என்பவர் ஓட்டி வந்தார். அப்போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்றுகொண்டிருந்த மற்றொரு லாரி மீது கண்ணிமைக்கும் நேரத்தில் வேகமாக மோதியது. இதையடுத்து, அந்த லாரி நிலைதடுமாறி முன்னாடி சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து மீது மோதியது. இதனால், அடுத்தடுத்து, கன்டெய்னர் லாரி, பேருந்து, லாரி என வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதனால் அப்பகுதியில் பயங்கர சத்தம் கேட்டது.