மருத்துவமனை சேவை நிபந்தனையுடன் பைக்ரேசில் ஈடுபட்ட மேலும் 3 பேருக்கு ஜாமீன்: முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:  சென்னை கொருக்குப்பேட்டை கார்னேசன் நகரை சேர்ந்த இளைஞர்கள் நான்கு பேர், மார்ச் 20ம் தேதி சென்னை ஸ்டான்லி மருத்துமனை ரவுண்டானாவில் இருந்து மூலகொத்தளத்திற்கு பைக் ரேஸ் சென்றனர். இதுதொடர்பாக அப்பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் மெக்கானிக் சார்லஸ் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் அளித்த புகாரில் பாலாஜி, ஹரீஷ்குமார், சல்மான்கான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் ஜாமீன் கோரி  மூவரும் தாக்கல் செய்த மனு முதன்மை செஷன்ஸ் நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மூவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

 பைக் ரேசில் ஈடுபட்டு கைதான பிரவீனுக்கு, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு வார்டில் ஒரு மாத காலம் வார்டு பாய்களுக்கு உதவியாக பணியாற்ற வேண்டும் எனவும், அதுகுறித்து மருத்துவமனை டீனுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் பிறப்பித்த நிபந்தனைகளை இந்த மூவரும் பின்பற்ற நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: