சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை:பின்னலாடைகளின் முக்கிய மூலப் பொருளான நூலின் விலை அண்மைக்காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு ₹230க்கு விற்பனையான நூல் விலை கடந்த ஓராண்டில் மட்டும் ₹160ஐ வரை உயர்ந்துள்ளது. இதுபோன்ற சூழலில் தற்போது அனைத்து நூல்களின் விலையும் கிலோவிற்கு 30 ரூபாய் ரக வரை உயர்த்தப்பட்டுள்ளது.