இடாநகர்: நாகலாந்தில் கடந்தாண்டு டிசம்பரில் பஸ்சில் சென்ற தொழிலாளர்களை தீவிரவாதிகள் என நினைத்து பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, அசாம், மணிப்பூர், நாகலாந்து மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை கடந்த மாதம் 31ம் தேதி ஒன்றிய அரசு ரத்து செய்தது.