சென்னை: பல தமிழ்ப் படங்களில் இணைந்து பணியாற்றிய இசை அமைப்பாளர்கள் இளையராஜாவும், அவரது தம்பி கங்கை அமரனும் கருத்து வேறுபாடு காரணமாக சில வருடங்கள் பிரிந்திருந்தனர். இந்நிலையில், சமீபத்தில் அவர்கள் நேரில் சந்தித்து மனம் திறந்து பேசினர். தங்கள் குடும்ப உறவு முறிந்துவிடக் கூடாது என்று முடிவு செய்த அவர்கள், மீண்டும் சினிமாவில் இணைந்து பணிபுரிய திட்டமிட்டுள்ளனர்.