பெங்களூரு : கர்நாடகத்தை சேர்ந்த காலஞ்சென்ற மடாதிபதி சிவகுமார சுவாமிக்கு பாரத ரத்னா விருது வழங்க உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கர்நாடக மாநிலம், துமக்கூரு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சித்தகங்கா மடத்தின் ஜீயராகவும், லிங்காயத் சமுதாயத்தின் ஆன்மிக தவைராகவும் ஸ்ரீசிவகுமார சுவாமி திகழ்ந்துள்ளார். கல்வி, ஆன்மீக சேவைகள், சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்த சிவகுமார சுவாமி 111 வயதில் காலமானார். மத்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷன் பட்டத்துடன் ‘நடமாடும் தெய்வம்’ என அவரது பக்தர்களால் அழைக்கப்படும் சிவகுமார சுவாமியின் தன்னலமற்ற தொண்டினை சிறப்பிக்குமாறு அவருக்கு நாட்டின் மிக உயரிய ‘பாரத ரத்னா’ விருது அளிக்கப்பட வேண்டும் என்று ரெஹான் கான் என்பவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.