கடலூர்: விருத்தாசலம் அருகே கோவில் மற்றும் வீடுகளில் இயங்கி வரும் அரசுப்பள்ளிக்கு விரைவில் புதிய கட்டிடம் கட்டி தர மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே கவனை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது. இங்கு 42 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் உள்ள நிலையில், கடந்த 3 வருடங்களுக்கு முன்பு புதிய கட்டிடம் கட்டப்போவதாக கூறி பாழடைந்த பள்ளி கட்டிடத்தை இடித்தனர். ஆனால் இதுவரை பள்ளி கட்டிடம் கட்டப்படவில்லை. இதனால் பள்ளி குழந்தைகள் அங்குள்ள வாடகை வீட்டில் படித்து வருகின்றனர். மேலும் இடப்பற்றாக்குறை காரணமாக அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலிலும் ஒருபகுதி மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.