சென்னை: தஞ்சை பள்ளி மாணவி லாவண்யா மரணத்துக்கு நீதி கேட்டு, பாஜ மாணவர் அமைப்பான ஏபிவிபியை சேர்ந்தவர்கள், தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கைது செய்யப்பட்ட தொண்டர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புற்றுநோய் துறையின் தலைவர் டாக்டர் சுப்பையா சிறைக்கு சென்று சந்தித்தார். இதையடுத்து, டாக்டர் சுப்பையாவை பணியிடை நீக்கம் செய்து மருத்துவக் கல்வி இயக்குநர் மற்றும் சுகாதார துறை செயலாளர் ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர். இவற்றை எதிர்த்து டாக்டர் சுப்பையா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது.