இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக தெஹ்ரீக் - இ- இன்சாப் கட்சி கூறியுள்ளது. இஸ்லாமாபாத்தில் பேசிய பாகிஸ்தான் தெஹ்ரீக் - இ- இன்சாப் கட்சியின் மூத்த தலைவர் பைசல் வாக்டா, பிரதமர் இம்ரான்கானை கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். இதனால் பொதுக்கூட்டங்களில் பேசும்போது குண்டு துளைக்காத பாதுகாப்பு அரணை ஏற்படுத்துமாறு இம்ரான்கானை கேட்டுகொள்ளதாக வாக்டா கூறினார். ஆனால் இறைவன் நிர்ணயித்த நேரத்தில் இந்த உலகை விட்டு வெளியேறுவேன் என்று இம்ரான்கான் கூறிவிட்டதாக பைசல் வாக்டா தெரிவித்துள்ளார்.