காட்பாடி: காட்பாடி மற்றும் ராணிப்பேட்பகுதிகளில் 2 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு, இழப்பீட்டுத் தொகை ரூ 4.83 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சென்னை அமலாக்க கோட்டத்தின் சென்னை/மையம், சென்னை/வடக்கு, சென்னை/தெற்கு, சென்னை/மேற்கு, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் அமலாக்க அதிகாரிகள் வேலூர் மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட காட்பாடி மற்றும் ராணிப்பேட்டை பகுதிகளில் கூட்டு ஆய்வு மேற்கொண்ட போது 2 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.