காட்பாடி மற்றும் ராணிப்பேட்பகுதிகளில் 2 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு; இழப்பீட்டுத் தொகை ரூ 4.83 லட்சம் வசூல்

காட்பாடி: காட்பாடி மற்றும் ராணிப்பேட்பகுதிகளில் 2 மின் திருட்டுகள்  கண்டுபிடிப்பு, இழப்பீட்டுத் தொகை ரூ 4.83 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சென்னை அமலாக்க கோட்டத்தின் சென்னை/மையம், சென்னை/வடக்கு, சென்னை/தெற்கு, சென்னை/மேற்கு, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் அமலாக்க அதிகாரிகள் வேலூர் மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட காட்பாடி மற்றும் ராணிப்பேட்டை பகுதிகளில் கூட்டு ஆய்வு மேற்கொண்ட போது 2 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் ரூ.4,65,211 இழப்பீட்டு தொகையாக மின் நுகர்வோருக்கு விதிக்கப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து அதற்குரிய சமரசத் தொகை ரூ.18,000 செலுத்தியதால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை. மின் திருட்டு சம்பந்தமான தகவல்களை செயற்பொறியாளர்/அமலாக்கம்/சென்னை கைபேசி 9445857591  என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.

Related Stories: