மதுராந்தகம்: அறந்தாங்கியில் நடந்த ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீட குடமுழுக்கு விழாவில் பங்காரு அடிகளார் பங்கேற்றார்அறந்தாங்கியில் நேற்று முன்தினம் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தின் திருக்குடமுழுக்கு விழா நடந்தது. இதில், பங்காரு அடிகளார் பங்கேற்று நடத்தி வவைத்தார். முன்னதாக, இவ்விழாவில் பங்கேற்க, கடந்த 26ம் தேதி பங்காரு அடிகளார் காரைக்குடி வந்தார். அவருக்கு, வழிநெடுகிலும் செவ்வாடை பக்தர்கள் சிறப்பான வரவேற்பளித்தனர். பெரம்பலூரில் பங்காரு அடிகளாரை தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் முருகன், நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ ஆகியோர் சந்தித்து ஆசிபெற்றனர்.இதைதொடர்ந்து, நேற்று முன்தினம் அறந்தாங்கி, பழைய அரசு மருத்துவமனை சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தின் திருக்குடமுழுக்கு விழாவில் பங்காரு அடிகளார் பங்கேற்று, கோபுர கலசத்துக்கு புனிதநீர் ஊற்றி நடத்தி வைத்தார். கருவறையில் இருந்த ஆதிபராசக்தி சிலைக்கு, லட்சுமி பங்காரு அடிகளார் அபிஷேகம் செய்தார்.