சென்னை: சென்னை மதுரவாயல் மார்க்க சகாய ஈஸ்வரர் திருக்கோயில், சென்னை திருமங்கலம் திருமங்கலீஸ்வரர் திருக்கோயில் உள்ளிட்ட கோயில்களில் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வுக்கு பின்பு அமைச்சர் சேகர் பாபு நிருபர்களிடம் கூறியதாவது:இக்கோயில் சுமார் கி.பி 12ம் நூற்றாண்டை சேர்ந்தது. இக்கோயிலை சுற்றி 12ம் நூற்றாண்டு கல்வெட்டு உள்ளது, கருவறை கருங்கற்கள் பிரித்து கட்டுதல் மற்றும் இதர சன்னதிகள் மராமத்து செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள ₹25,53,810 நிதி வழங்கப்பட்டுள்ளது.