சென்னை: தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சி.என்.மகேஸ்வரன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இங்கிலாந்து நாட்டில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிவதற்கு செவிலியர்கள் IELTS/OET தேர்வில் தேர்ச்சி பெற்று குறைந்த பட்சம் ஆறு மாதம் பணி அனுபவம் பெற்ற டிப்ளமோ மற்றும் பட்டதாரி ஆண், பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். இவர்களுக்கு மாத சம்பளம் சுமார் ரூ.2 லட்சம் வழங்கப்படும். மேலும் ஜெர்மன் நாட்டில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிவதற்கு ஏ1, ஏ2, பி1 நிலையில் ஜெர்மன் மொழி தேர்ச்சி பெற்று குறைந்தபட்சம் ஒரு வருட பணி அனுபவம் பெற்ற 42 வயதுக்கு உட்பட்ட டிப்ளமோ மற்றும் பட்டதாரி ஆண்,பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.