வாகன விபத்தில் தொழிலாளி பலி: லாரி டிரைவர் கைது

குன்றத்தூர்: குன்றத்தூர், கிழக்கு குளக்கரை தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (50). நெசவு தொழிலாளி. நேற்று முன்தினம் மூர்த்தி, குன்றத்தூர் மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள கடைக்கு பைக்கில் சென்றார். பின்னர் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி, கண்ணிமைக்கும் நேரத்தில் மூர்த்தியின் பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மூர்த்தி, அதே லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

தகவலறிந்தது குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் குன்றத்தூரை சேர்ந்த சேகர் (65) என்பவரை கைது செய்தனர்.

Related Stories: