குன்றத்தூர்: குன்றத்தூர், கிழக்கு குளக்கரை தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (50). நெசவு தொழிலாளி. நேற்று முன்தினம் மூர்த்தி, குன்றத்தூர் மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள கடைக்கு பைக்கில் சென்றார். பின்னர் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி, கண்ணிமைக்கும் நேரத்தில் மூர்த்தியின் பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மூர்த்தி, அதே லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.