காஞ்சிபுரம்: புத்தேரியில் ஆக்கிரமித்து பயிர்செய்த ₹2 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை வருவாய் துறையினர் அதிரடியாக மீட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆறு, ஏரி, குளம், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை மீட்கும்படி மாவட்ட வருவாய் துறையினருக்கு காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார். அதன்படி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை மீட்கும் நடவடிக்கையில் வருவாய் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஞ்சிபுரம் தாலுகாவுக்குட்பட்ட புத்தேரியில் வேகவதி ஆற்றின் கரையோர பகுதி நிலங்களை பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து பயிர்செய்து செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்பு நிலங்களை காலி செய்யும்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு வருவாய் துறையினரும், பொதுப்பணி துறையினரும் நோட்டீஸ் வழங்கினர். ஆனால் யாரும் காலி செய்யவில்லை.