ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே மாளந்தூர் கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. 260 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு 12 ஆசிரியர்கள் வேலை பார்த்தனர். தற்போது 5 ஆசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இதில், 6 முதல் 8ம் வகுப்பு வரை 4 ஆசிரியர்களும், 10ம் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளனர். தற்போது, சில வாரங்களில் 10ம் வகுப்பு பொது தேர்வு நடைபெற உள்ளது. அதனால் போதிய ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தி கலெக்டரிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். எனினும், மனு மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.