சென்னை: தெற்கு ரயில்வே பாதுகாப்பு படை வீரர் வடமாநிலத்தை சேர்ந்த அபூர்வா பாவரி(31) என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது உறவினர் ஒருவர் உடல் நலக்குறைவால் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அபூர்வா பாவரி தனது உறவினரை நேற்று இரவு மருத்துவமனையில் பார்த்துவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது தனது உறவினர் உடல் நலம் குறித்து தனது குடும்பத்தினரிடம் அபூர்வா பாவரி செல்போனில் பேசி கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் ராயப்பேட்டையை சேர்ந்த பல்வேறு வழக்கில் தொடர்புடைய ரவுடி ஹரி(40), தனது நண்பர் அருண்(38) உட்பட 4 பேருடன் மதுபோதையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது ரயில்வே பாதுகாப்பு படை வீரர் அதிக சத்ததுடன் செல்போனில் பேசி கொண்டிருந்ததை பார்த்து, ரவுடி ஹரி என் முன்பு செல்போனில் பேசு கூடாது. இங்கிருந்து ஓடவிடு என்று கூறியுள்ளார்.