டெல்லி: இந்தியாவில் 12 முதல் 18 வயதுடைய இளம்பருவத்தினருக்கு நோவாவாக்ஸ் கொரோனா தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது. இந்தியாவில் தற்போது பெரியவர்களுக்கு கோவேக்சின், கோவிட்ஷீல்டு, ஸ்புட்னிக் வி, மார்டோனா உள்ளிட்ட சில கொரோனா தடுப்பூசிகளும், 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கோவேக்சின் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்த வரிசையில் கோர்பேவாக்ஸ் என்ற புதிய தடுப்பூசியும் பயன்பாட்டுக்கு வந்தது.