பென்னாகரம் : கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து விரட்டியடிக்கப்படும் யானைகள் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் தஞ்சமடைவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், கோடைகாலம் துவங்கியுள்ளதால் யானைகள் கூட்டம், கூட்டமாக ஒகேனக்கல் வனப்பகுதிக்கு உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்த வண்ணம் உள்ளன. இந்த யானைகள் ராசிகுட்டை, சின்னாறு வனப்பகுதிகளில் முகாமிட்டுள்ளன. நாள்தோறும் காலை வேளையில் ஒகேனக்கல் வனப்பகுதிக்குட்பட்ட பகுதியில் முகாமிட்டு முண்டச்சி பள்ளம் என்னுமிடத்தில் ரோட்டை கடந்து செல்கின்றன. இந்நிலையில், நேற்று பென்னாகரத்தில் இருந்து ஒகேனக்கல் செல்லும் சாலையில் வந்த ஒரு ஒற்றை யானை அரசு பஸ் மற்றும் காரை வழிமறித்தது.