சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கை:கடந்த ஆட்சியில் உயர்த்தப்பட்ட நகராட்சி, ஊராட்சி மற்றும் அறநிலையத்துறை கடைகள் சம விகிதமற்ற வாடகைப் பிரச்னைகளாலும், நீதிமன்ற வழக்குகளாலும் வாடகைத் தொகை நிலுவையில் இருக்கிறது. தற்போது நடைமுறையில் உள்ள வாடகையை வணிகர்கள் இன்றுவரை செலுத்தி வருகிறார்கள். இது சம்பந்தமாக பேரமைப்பு சார்பில் அரசுக்கு பலமுறை முறையீடுகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் கொடைக்கானல், நீலகிரி, பழனி, சென்னை பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளை அரசு அதிகாரிகள் திடீரென சீல்வைக்க முனைந்துள்ளார்கள்.