சென்னை: வங்கக்கடலில் அந்தமான் அருகே அசானி புயல் உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அசானி புயல்நாளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மறுநாள் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தம் இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.