பாரதி பெருமைகளை புகழ்பாடும் ஓராண்டு தொடர் நிகழ்ச்சி: அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓராண்டிற்கு சென்னை பாரதி நினைவு இல்லத்தில் வாரந்தோறும் நிகழ்ச்சி ஒன்று செய்தித்துறையினரால் நடத்தப்படும் என அறிவித்தார். அதன்படி சென்னை, திருவல்லிக்கேணி பாரதியார் நினைவு இல்லத்தில் பெரும்புலவன் பாரதி மறைந்த நூற்றாண்டின் நினைவாக அவரது பெருமைகளை புகழ்பாடும் ஓராண்டு தொடர் நிகழ்ச்சிகளை செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

மேலும் சென்னை, அரசு முஸ்லிம் ஹோபாட் மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியும், சென்னை, நுங்கம்பாக்கம், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளின், மகாகவி பாரதியாரின் கவிதைகள், பாடல்கள் மற்றும் குழுப்பாட்டு நிகழ்ச்சியும்  நடந்தது. நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திவாகர், செய்தி மக்கள் தொடர்புத் துறை துணை இயக்குநர் அண்ணாதுரை, ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரமேஷ் நன்றி கூறினார்.

Related Stories: