சேலம்: சேலம் முன்னாள் எம்பி தேவதாஸ், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவருக்கு அவர் அனுப்பி வைத்தார். சேலம் முன்னாள் காங்கிரஸ் எம்பி.தேவதாஸ், சேலத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: எனது தந்தை ராமசாமி உடையார் 60ஆண்டு காலம் காங்கிரஸ் கட்சியை வளர்த்தார். நான் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியில் இருக்கிறேன். சேலம் தொகுதியின் த.மா.கா. எம்பியாக பணியாற்றியுள்ளேன். ஆனால் காங்கிரஸ் கட்சியில் எனக்கு மதிப்பு, மரியாதை இல்லை. சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கமிட்டி உறுப்பினராக கூட என்னை நியமிக்கவில்லை. காங்கிரசில் யார், யாருக்கோ பதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் காமராஜரோடு இருந்து, கட்சியை வளர்த்த ராமசாமி உடையார் மகனான எனக்கு ஒரு பொறுப்பும் ெகாடுக்கவில்லை.