அரக்கோணம்: அந்தமான் நிக்கோபார் தீவில் புயல் எச்சரிக்கை காரணமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் தனி விமானத்தில் விரைந்தனர். அந்தமான் நிக்கோபார் தீவுகள் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இது புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் அப்பகுதியில் புயல் மற்றும் கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழை காரணமாக அந்தமான் நிகோபார் தீவுகளில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.