கோத்தகிரி : சுற்றுலா மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் பனிக்காலம் முடிந்து தற்போது கோடைக்காலம் துங்கிய நிலையில் இதமான காலநிலை நிலவி வருவதால் ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை ஜகரண்டா மலர்கள் பூத்துக்குலுங்கும். ஜகரண்டா மலர்கள் பூக்கும் மரங்கள் நிழல் தரும் மரமாகவும், தேயிலை தோட்டங்களை அழகுபடுத்தும் வேலியாகவும் ஆங்கிலேயர் காலத்தில் நடவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.