சென்னை: வன பரப்பை 33 சதவீதம் உயர்த்திட வரும் இரண்டு ஆண்டுகளில் மட்டும் 2.50 கோடி மரக்கன்றுகள் நடுவதற்கான பெரும் திட்டம் உள்ளதாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நேற்று வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: ₹6 கோடியில் கொரோனா காலத்தில் ஏற்பட்ட வருவாய் இழப்பினை ஈடுசெய்து உயிரியல் பூங்காவில் உள்ள அனைத்து வன உயிரினங்களுக்கான உணவு வழங்குதல் மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கூடுதல் வசதிகளை உருவாக்கி பொதுமக்களுக்கான அடிப்படை தேவைகளை சிறப்பாக நிறைவேற்றிட ₹15 கோடி மதிப்பில் அறிக்கை அனுப்பி பல்வேறு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.