காரியாபட்டி : காரியாபட்டி அருகே சூரனூர் நெடுங்குளம் கிராமத்தில் ராமநாதபுரம் மாவட்டம், ஓரிவயலை சேர்ந்த அழகர், போஸ் ஆகியோர் 200க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வயல்களில் கிடை அமர்த்தி வாழ்ந்து வந்தனர். இதில் 25 ஆட்டுக்குட்டிகள் தவிர மற்ற ஆடுகளை முடுக்கன்குளத்தை சேர்ந்த தங்கபாண்டியன் என்பவர் வயலில் ஆடுகளை கிடை அமர்த்தி இருந்தனர். நேற்று அங்கிருந்த ஆடுகளை வழக்கம்போல் மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டு மாலையில் திரும்பியுள்ளனர்.