காரியாபட்டி அருகே 25 ஆடுகள் தீயில் கருகி சாவு

காரியாபட்டி : காரியாபட்டி அருகே சூரனூர் நெடுங்குளம் கிராமத்தில் ராமநாதபுரம் மாவட்டம், ஓரிவயலை சேர்ந்த அழகர், போஸ் ஆகியோர் 200க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வயல்களில் கிடை அமர்த்தி வாழ்ந்து வந்தனர். இதில் 25 ஆட்டுக்குட்டிகள் தவிர மற்ற ஆடுகளை முடுக்கன்குளத்தை சேர்ந்த தங்கபாண்டியன் என்பவர் வயலில் ஆடுகளை கிடை அமர்த்தி இருந்தனர். நேற்று அங்கிருந்த ஆடுகளை வழக்கம்போல் மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டு மாலையில் திரும்பியுள்ளனர்.

அப்போது நெடுங்குளத்தில் தற்காலிக குடிசை தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்தது. அருகில் வந்து பார்த்த போது குடிசைக்குள் இருந்த 25 ஆடுகளும் தீயில் கருகி பலியாகி கிடந்தன. இதுகுறித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிந்து தீ வைத்தது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: